ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை புனிதர்களாக திருநிலைப்படுத்தப்படுத்த தீர்மானம்: பேராயர்

Date:

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் புனிதர்களாக திருநிலைப்படுத்த அவர்களின் பெயர்களை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஈஸ்டர் தாக்குதல் நடந்து 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.

இதனால், தாக்குதலில் கொல்லப்பட்ட 273 பேரின் பெயர்களை பரிசுத்த சபைக்கு சமர்ப்பித்து அவர்களை புனிதர்களாக திருநிலைப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அவர்கள் நம்பிக்கையுடன் தேவாலயத்திற்குள் வந்ததன் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்கள் வீட்டில் இருந்திருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஈஸ்டர் திருப்பலி பூஜைக்கு வந்ததன் காரணமாக உயிர்களை தியாகம் செய்தனர்.

இவர்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதனை ஏப்ரல் 21 ஆம் திகதி அறிவிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாம் எவருக்கும் பயப்பட தேவையில்லை.நமக்கு நாமே பயப்பட வேண்டும் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...