நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் போக்குவரத்து நடவடிக்கை பாதிப்பு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாத்தளை உக்குவெல – பண்டாரபொல வீதி, பல்லேபொல – கொஹொல்லன்வல வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும், லக்கல – ரிவஸ்டன் வீதி ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...