நேற்றைய ஆர்ப்பாட்டம்: அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு

Date:

நேற்று  அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை கொழும்பில்  எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது.

”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பொலிஸாரின் தடுப்புகளை தாண்டி பேரணி பயணிக்க முற்பட்ட போது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கை தொடர எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிகார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...