நேற்றைய ஆர்ப்பாட்டம்: அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு

Date:

நேற்று  அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை கொழும்பில்  எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது.

”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பொலிஸாரின் தடுப்புகளை தாண்டி பேரணி பயணிக்க முற்பட்ட போது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கை தொடர எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிகார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...