அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு: ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சுவிட்சர்லாந்து பயணமானார்.

அவரது உத்தியோகபூர்வ விஜயம் 12 நாட்களைக் கொண்டதாக அமையுமென என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் உகாண்டாவின் கம்பாலாவில் 19 ஆவது அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாடு திங்கட்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...