இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பான சட்டமூல வரைவு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டின் இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டம், சட்டமூலம் என அறியப்படும்.
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை உறுதிப்படுத்தி சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும், இம்முயற்சிக்கு அனைத்து தமிழ்த்தரப்புக்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையின மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் எனவும் அண்மையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..