பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய ‘ஓமன் ஏர்’

Date:

ஓமான் அரசுக்கு சொந்தமான ‘ஓமன் ஏர்’ அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது என விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தின்படி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், இலங்கையின் கொழும்பு மற்றும் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்படும்.

எவ்வாறெனினும், விமான நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டிற்கு ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கும்.

மற்றும் இந்தியாவில் லக்னோ, உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவின் திருவானந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கான மேலதிக விமான சேவையையும் குறித்த நிறுவனம் ஆரம்பிக்கும்.

இது தவிர மேலும் பல பகுதிகளுக்கும் சேவையினை விஸ்தரிக்க ஓமன் ஏர் திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...