12 வயதிற்குட்பட்ட தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலை மாணவர்கள் தெரிவு!

Date:

12 வயதின் கீழ் பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் Renown உதைபந்து அகடமியின் ஆதரவுடன் 12 வயதிற்குட்பட்ட பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கான (ஆண்கள்) வீரர்கள் தெரிவு நேற்று (22) கொழும்பு Racecourse மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெற்றது.

இந்த தெரிவுக்காக ஒரு பாடசாலையில் இருந்து 2012/2013 ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறந்த வீரர்கள் இருவர் தெரிவு செய்து அனுப்பப்பட்டனர்.

இதேவேளை  ‘எமது பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த M. M. Mohammed Sakeef மற்றும் T. Safeen Ahmed ஆகிய இரண்டு மாணவர்களும்  தேசிய அணிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து தந்திருக்கின்றார்கள் என  பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...