அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு: ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சுவிட்சர்லாந்து பயணமானார்.

அவரது உத்தியோகபூர்வ விஜயம் 12 நாட்களைக் கொண்டதாக அமையுமென என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் உகாண்டாவின் கம்பாலாவில் 19 ஆவது அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாடு திங்கட்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...