இஸ்ரேலிய கப்பல் கைப்பற்றப்பட்டது: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட காணொளி

Date:

செங்கடல் பகுதியைக் கடக்கும் “இஸ்ரேலியக் கப்பலில்” ஒரு சிறப்புப் படை விமானத்தை தரையிறக்கி பணியாளர்களை கட்டுப்படுத்தும் காட்சிகளை  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இரான் ஆதரவுப்பெற்ற ஹவுதி குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

ஹமாஸ் மற்றும் பலத்தீனர்களுக்கு தாம் ஆதரவளிப்பதை வெளிப்படுத்த, இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாக்கி வருகிறோம் என ஹவுதி கூறியுள்ளது.

வணிக கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இதேவேளை   ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...