நேற்றைய ஆர்ப்பாட்டம்: அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு

Date:

நேற்று  அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை கொழும்பில்  எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது.

”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பொலிஸாரின் தடுப்புகளை தாண்டி பேரணி பயணிக்க முற்பட்ட போது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கை தொடர எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிகார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...