முதலை கடித்து உயிரிழந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது: பிரேத பரிசோதனை முன்னெடுப்பு!

Date:

களனி ஆற்றில் நீராட சென்ற நிலையில் முதலை கடித்து உயிரிழந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் சுழியோடி அதிகாரிகள் இணைந்து நேற்று (17) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் ஆழத்தில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடுவலை – வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் 09 வயதுடைய பிரபோத் பெரேரா எனும் சிறுவனே நேற்று முன்தினம் (16) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடுவலை – வெலிவிட்ட புனித மரியாள் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயின்றுவந்த சிறுவன் தமது பாட்டி மற்றும் இளைய சகோதரருடன் நீராடச் சென்றுள்ளார்.

பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, ​​தனது தம்பியுடன் நீந்திக் கொண்டிருந்த நிலையிலே சிறுவனை முதலை இழுத்துச்சென்றுள்ளது.

குறித்த சிறுவனை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் கடற்படையினர் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பின்னணியிலே, சிறுவனின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சடலம் இன்று (18) பிரேத பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...