பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போகும் இஸ்ரேல்!

Date:

காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.

“எமது இஸ்ரேல் ராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் பிரிவுகளை அழிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதக் குழுவின் போரிடும் திறனை கடுமையாக பலவீனப்படுத்தும் என்றும் கேலண்ட் கூறியுள்ளார்”.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும், இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரை நோக்கி சுமார் 1.9 மில்லியன் பலஸ்த்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் இந்த நடவடிக்கையானது தற்போது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...