15ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரிகர்கள் திணைக்­களத்தில் பதிவு செய்து கொள்ளவும்

Date:

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக  புதன்­கி­ழமை வரை 2630 பேரே விண்­ணப்­பித்­துள்­ளார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளம் தெரிவித்துள்ளது.

இவ்­வ­ருட ஹஜ் விசா எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்­சினால் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளதால் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன் ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களத்தில் தங்­களைப் பதிவு செய்து கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

இறுதி நேர நெருக்­க­டி­களைத் தவிர்ப்­ப­தற்­காக ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம­தி­யாது 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­ட­ணைத்தைச் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதிப் பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­களைத் தொடர்பு கொண்டு பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் படி ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் ஏ.சி.பி.எம்.கரீம் வேண்­டு­கோள் ­வி­டுத்­துள்ளார்.

திணைக்­க­ளத்­தினால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள 93 ஹஜ் முக­வர்­களின் பெயர் பட்­டியல் மற்றும் விப­ரங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முகநூல் பக்கம் மற்றும் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தெ­னவும் அவர் கூறினார்.

எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் விசாக்களை விநியோகிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...