இலங்கையின் சுகாதார அமைப்புக்குள் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மானியமாகப் பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன ஆகியோர் முன்னிலையில் குறித்த டீசல் மானியத்தை கையளிக்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக கொழும்பு துறைமுகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
அதேநேரம், குறித்த டீசல் மானிய முகாமைத்துவத்தை, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வகையில் உறுதி செய்வதற்காக அதிநவீன எரிபொருள் முகாமைத்துவ தகவல் அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.