இலங்கையிலிருந்த கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழப்பு: அதிக தடுப்பூசி செலுத்தியமையே காரணம்!

Date:

இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளது.

இந்த ஆண் வரிக்குதிரை 06 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டிற்கு பெறப்பட்டது.

ரிதியகம பூங்காவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக இந்த வரிக்குதிரையை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு விலங்குகளை கொண்டு வரும்போது அதிக அளவு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இந்த வரிக்குதிரைக்கும் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதாலேயே உயிரிழந்திருக்க கூடும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் மிகவும் அரிதாக வாழும் உயிரினங்களில் வரிக்குதிரையும் ஒன்றும். வரிக்குதிரையின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க கடந்த காலத்தில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில்தான் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வரிக்குதிரைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடைசி ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதால் எதிர்காலத்தில் வரிக்குதிரை இனம் இலங்கையில் அழிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...