ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் இலாபத்தை தேட வேண்டாம்: கத்தோலிக்க திருச்சபை

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்  பிரதான குற்றவாளி தொடர்பில் அவசர அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா? என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்து அரசியல் இலாபத்தை தேட வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் அப்படிப்பட்ட மாயையில் மக்கள் விழ மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 90 வீதத்துக்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன கூறிய தகவல்கள் அவற்றில் வெளியாகியுள்ளனவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றைய தினம் அழைக்கப்பட்ட நிலையில் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களின் பின்னர் தற்போது அவர் இவ்வாறு தெரிவிப்பது நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...