ஆலிமா ஜெர்னலிஸம்: முதல் செயலமர்வு மள்வானையில்…!

Date:

ஷரீஆத்துறை மாணவிகளுக்கான ஆலிமா ஜெர்னலிஸம் மூன்று நாள் செயலமர்வு மள்வானை அல் இமாம்அப்துல் அஸீஸ் பின்பாஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

முதலாம் நாள் ஆரம்ப விரிவுரையை நிகழ்த்திய நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் தூய இலங்கையை கட்டியெழுப்ப ஊடகத்துறையின் பயன்பாடு தொடர்பாக விளக்கினார்.
இதனையடுத்து விரிவுரை நிகழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ரிப்தி அலி தகவல் அறியும் சட்டமும் அதன் பயன்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இரண்டாம் நாள் உரை நிகழ்த்திய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சஹாப்தீன் மக்களுக்கு தஃவாப் பணிகளை முன்னெடுக்க கைபேசி ஊடகத்தை படபயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தார்.

மூன்றாம் நாள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தஃவாப் பணியை முன்னெடுப்பது தொடர்பாக தகவல் திணைக்கத்தின் சிரேஷ்ட தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா விளக்கமளித்ததுடன் எதிர்கால சமுதயாத்துக்கு சன்மார்க்க விளக்கங்களை வழங்க இந்த நுட்பம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும்  செயல் ரீதியாக செய்து காட்டினார்.

இந்த மூன்று நாள் கருத்தரங்கை பஹன அகடமிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹம்மத் நெறிப்படுத்தினார்.

இதனையடுத்து இறுதிநாள் இறுதி அமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கல்லூரியின் அதிபர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...