குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை!

Date:

நாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கினோம். அதேபோன்ற மாவட்ட அரசாங்க அதிபர்கள் மூலம் இதனை கணக்கிட்டு, 20 கிலோ அரிசியை வெளிப்படையாக வழங்குவோம்.

28 இலட்சம் குடும்பங்களுக்கும் இரண்டு கட்டங்களாக இதனை வழங்க உள்ளோம். ஏப்ரல் மாதம் 10 கிலோவும் மே மாதம் 10 கிலோ வங்க எதிர்பார்க்கின்றோம். சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 10 கிலோ அரசியை வழங்கவுள்ளோம்.
இது அரசாங்கத்தின் பரந்த நோக்கமாகும்.

விவசாயிகளுக்கு இதன்மூலம் அதிக வருமானம் கிடைக்கும் விலையை உயர்த்துவது மறுபுறம் சிறிய மற்றும் நடுத்தர மில் உரிமையாளருக்கு வருமானம் ஈட்ட இது ஒரு சந்தர்பமாக அமையும்” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...