தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்: மார்ச் 12 இயக்கத்தின் இன்றைய விழிப்புணர்வு செயற்றிட்டம்

Date:

“தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்துவதைக் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு இன்று விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர், இளையோர், பெண்கள் அமைப்பினர் இணைந்து தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

இத்துண்டு பிரசுரத்தில் பாரளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளுராட்சிசபைத் தேர்தல் காலங்களில் நல்ல தலைவர்களை உருவாக்கி தெரிவுசெய்யும் பணியில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டிய 08 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பிரபல பேச்சாளர்களின் முக்கிய உரைகள்,
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி, என்பனவும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
மார்ச் 12 இயக்கம் – தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கோடு 2015ஆம் ஆண்டு சிவில் சமூக அமைப்புக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...