புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தை மார்க்கெட் ஜப்பான் வசமாகிறது..!

Date:

புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு முப்பது வருட குத்தகை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளரான அகிரா ஹிரோஸ் இடையே இடம்பெற்றது.

அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தின் மேலாண்மை மற்றும் இயக்கம் இந்த ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.

மிதக்கும் வணிக வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை உரிய முறையில் கையாளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதார சிக்கல்கள் காரணமாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியைப் பயன்படுத்தி இதனை அபிவிருத்தி செய்வது கடினம் என்பதால் இதனை அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அல்லது அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அபிவிருத்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜப்பானிய நகரம் மற்றும் மிதக்கும் சந்தை என்ற கருப்பொருளில் மிதக்கும் நகரம் 6 மாதங்களில் உருவாக்கப்பட உள்ளது. இந்த மிதக்கும் சந்தை 92 கடைகளைக் கொண்டுள்ளது.

தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் இதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...