ஆலிமா ஜெர்னலிஸம்: முதல் செயலமர்வு மள்வானையில்…!

Date:

ஷரீஆத்துறை மாணவிகளுக்கான ஆலிமா ஜெர்னலிஸம் மூன்று நாள் செயலமர்வு மள்வானை அல் இமாம்அப்துல் அஸீஸ் பின்பாஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

முதலாம் நாள் ஆரம்ப விரிவுரையை நிகழ்த்திய நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் தூய இலங்கையை கட்டியெழுப்ப ஊடகத்துறையின் பயன்பாடு தொடர்பாக விளக்கினார்.
இதனையடுத்து விரிவுரை நிகழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ரிப்தி அலி தகவல் அறியும் சட்டமும் அதன் பயன்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இரண்டாம் நாள் உரை நிகழ்த்திய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சஹாப்தீன் மக்களுக்கு தஃவாப் பணிகளை முன்னெடுக்க கைபேசி ஊடகத்தை படபயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தார்.

மூன்றாம் நாள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தஃவாப் பணியை முன்னெடுப்பது தொடர்பாக தகவல் திணைக்கத்தின் சிரேஷ்ட தகவல் அதிகாரி பவாஸ் அன்பியா விளக்கமளித்ததுடன் எதிர்கால சமுதயாத்துக்கு சன்மார்க்க விளக்கங்களை வழங்க இந்த நுட்பம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும்  செயல் ரீதியாக செய்து காட்டினார்.

இந்த மூன்று நாள் கருத்தரங்கை பஹன அகடமிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹம்மத் நெறிப்படுத்தினார்.

இதனையடுத்து இறுதிநாள் இறுதி அமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கல்லூரியின் அதிபர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...