இஸ்ரேலில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

Date:

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கணிசமானோர் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன், அரசாங்கமும் இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் சென்று பணிபுரிவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது.

அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல்வேறு நாடுகள் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

அந்த வகையில், இஸ்ரேலின் விவசாய துறையில் பணியாற்றுவதற்காக 1064 இலங்கையர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதத்தில் மாத்திரம் குறித்த எண்ணிக்கையிலான இலங்கையர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் 1666 இலங்கையர்கள் இஸ்ரேலின் விவசாய பணிக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இஸ்ரேலின் தாதியர் துறையில் பணியாற்றுவதற்காக 29 இலங்கையர்களுக்கு நேற்று விமான பயண சீட்டுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...