ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சை கருத்து : நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிக்கு உத்தரவு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தனக்குத் தெரியுமென, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குள்ளானது.

 குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, CID யினர் இது தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் வழங்குமாறு கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும்...

இ.போ.ச பஸ்ஸை செலுத்தி சென்ற சாரதி மாரடைப்பினால் உயிரிழப்பு

இ.போ.சவுக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியொருவர் தான் செலுத்தி சென்ற பஸ்ஸில் மாரடைப்பு...

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் நியமனம்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேனாக டபிள்யூ.ஏ.சூலானந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் நிர்வாக சேவைகளில் சிறப்பு...

விடைபெற்றுச் செல்லும் முன்னாள் பணிப்பாளருக்கு சர்வமதத் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம்

முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடந்த ஒரு வருடத்துக்கு மேல்...