கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு வாயில் சிவப்பு புள்ளிகள் அல்லது மூட்டுகளில் வெள்ளை நீர் கொப்புளங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் இது ஒரு வைரஸ் நோய் என்பதினை பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.