பதிவு செய்யப்படாத மத நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

மக்களை அந்நிய மதங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பதிவு செய்யப்படாத மத நிலையங்களை முற்றுகையிடுவதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை பெற துறைக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முடிவு செய்துள்ளார்.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் அதற்காக பொலிஸ் மா அதிபரு்ககு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பௌத்த பீடங்களின் தலைமை பிக்குகளுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கை குறித்து அமைச்சர் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சமய வழிப்பாட்டு தலங்கள்,பிக்குகள் சம்பந்தமான பிரச்சினைகள்,சமயத்தை திரிபுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பௌத்த பிக்குகளும் அமைச்சரும் இதன் போது விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...