மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து: சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணை

Date:

 ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(25) வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கிய வாக்குமூலம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர் வழங்கிய வாக்குமூலம் மற்றும் அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் தான் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 22 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...