ஈஸ்டர் தாக்குதல் : உண்மைகளை வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? சர்வதேச விசாரணை எங்கே

Date:

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கால அவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்” என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வினாத் தொடுத்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்களாகின்ற போதிலும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுக்கள் தங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. ஆனால் எதுவித பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

இந்த விடயம் அமைச்சர்கள் சிலருக்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வாறில்லை.

சஹ்ரானுடன் அதிக தடவை தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரி யார் என தெரிந்தாலும் மேலதிக விசாரணைகள் இடம்பெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அதிக பயனடைந்தார். அவர் பதவியேற்றதன் பின்னர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 31 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தாக்குதல் இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவால் தகவல்கள் வழங்கப்பட்டன. அத் தகவல்கள் விடுக்கப்பட்ட திகதிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.

விசாரணைகளின் மூலம் பிரதான சூத்திரதாரி யார் என எப்போது வெளிப்படுத்துவீர்கள். இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்றே பதில் தேவைப்படுகிறது.” சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று 5 ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்.அதற்கு உரிமையும் கிடையாது” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...