நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000 ஆசிரியர் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 3,800 தட்டுப்பாடுகளும், வடமத்திய மாகாணத்தில் 3,698 தட்டுப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தில் 3,100 தட்டுப்பாடுகள் பதிவாகியுள்ளன; மற்றும் மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 6,200 பற்றாக்குறைகள் பதிவாகியுள்ளன.