பொது மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் அவசர அறிவிப்பு

Date:

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0715308032 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத்திடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...