கொத்து ரொட்டி பார்சல் விலை ரூ.1900: புதுக்கடை உணவகத்தின் உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு

Date:

 அண்மைய நாட்களாக சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது மட்டுமல்ல அவர்களை உள ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகிறது.

அந்தவகையில், ஒரு உளுந்து வடைக்கும் ஒரு கப் தேனீருக்கு 1000 ரூபா கோரப்பட்ட சம்பவம் கடந்த வாரம் களுத்துறையில் பதிவாகியிருந்தது.

குறித்த தொகை நியாயமற்றது என அந்த வெளிநாட்டவர் உறுதியாக நின்ற நிலையில் 800 ரூபா அறவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு – புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர உணவகமொன்றில் கொத்து ரொட்டி பார்சல் ஒன்றுக்கு 1900 ரூபா கோரிய சம்பவம் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம், தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன், விமர்சனங்களும் முன்வைக்கபட்டன.

அத்துடன், குறித்த உணவாக உரிமையாளர் வெளிநாட்டவரிடம் அநாகரிகமான முறையிலும் நடந்துகொண்டதனை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையிலே, வெளிநாட்டவருக்கு அதிக விலையில் உணவு விற்பனை செய்ய முயன்ற உணவாக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸாரினால் குறித்த நபர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...