தனக்கு தானே கல்லறை அமைத்து கொண்ட பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று மாலை

Date:

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளன.

இதனடிப்படையில், அவரது பூதவுடல் மத்துகம யட்டதோலவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தனக்காக தாமே தயாரித்த கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்தவண்ணமும் உள்ளனர்.

மின்சாரம் தாக்கியமையினால் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...