இலங்கைக்கான புதிய துருக்கி தூதுவர் நியமனம்

Date:

இலங்கைக்கான துருக்கி தூதுவராக செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) (52)  நியமிக்கப்பட்டுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி தையிப் அர்தூகானால் இந்த நியமனம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கான துருக்கி தூதுவராக செயற்பட்ட திருமதி ராகிபே டெமெட் செகெர்சியோகுளு அண்மையில் தனது பதவிக் காலத்தினை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இலங்கைக்கான துருக்கியின் நான்காவது தூதுவராக  இவர் நியமிக்கப்பபட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பேர்கிற்கான துருக்கியின் முதலாவது கொன்சியூலர் ஜெனரலாக இவர் சுமார் ஐந்து வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

துருக்கியின் வெளிநாட்டு சேவையில் சிரேஷ்ட அதிகாரியான இவர், பல நாடுகளிலுள்ள துருக்கி தூதுவராலயத்திலும் துருக்கி வெளிநாட்டு அமைச்சிலும் கடமையாற்றியுள்ளார்.

பல்வேறு இராஜதந்திர பதவிகளை வகித்த இவர் முதற்தடவையாக தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...