நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்,மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இடி, மின்னலுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த வானிலை அறிவிப்பு இன்றிரவு 11.30 வரை செலுப்படியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.