மட்டக்களப்பு ஏறாவூரில் இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அரபுக் கல்லூரிக்கு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தாசம் அல்- கஹ்தானி நேற்று விஜயம் செய்தார்.
வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் சவூதி அரேபிய தூதுவர் விஜயம் செய்தார்
இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர்.