கிழக்கு ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய பெண் மீட்பு

Date:

காணாமல் போன இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி ஒருவர், 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணித்தியாலத்திற்குள் குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மீட்பு பணியில் பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவற்றை ஈடுபடுமாறு ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் (29) மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனையின் பின், இஸ்ரேல் தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது,...

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...