தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்: விசேட வசதிகள் ஏற்பாடு

Date:

தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இருந்து வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பொசன் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் பள்ளிவாசல்கள் பொசன் வாரத்தில் மூடப்பட்டுள்ளன.

மேலும் தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்பாடசாலைகள் வரும் 20ம் திகதி முதல் 23ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...