தேசிய பொசன் வாரம் இன்று ஆரம்பம்: விசேட வசதிகள் ஏற்பாடு

Date:

தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இருந்து வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய பொசன் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் பள்ளிவாசல்கள் பொசன் வாரத்தில் மூடப்பட்டுள்ளன.

மேலும் தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்பாடசாலைகள் வரும் 20ம் திகதி முதல் 23ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...