ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கையானது இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரச அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனி பொலிஸ் நிலையமொன்றினை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், அச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று இன்று அரச அச்சகத்திற்கு சென்று பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள (Department of Government Printing)  பிரதானி கங்கானி கல்பனா லியனகே (Gangani Kalpana Liyanage) மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...