பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம், நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணைய வழியாக மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அந்த ஆணைக்குழு கேட்டுள்ளது.

இதற்கிணங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரவேசித்து, விண்ணப்பங்களை உரிய முறையில் அனுப்பி வைக்க முடியும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...