‘மாணவர்களை கொலை செய்வதை நிறுத்து’: பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Date:

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன்முறையை நிறுத்துமாறும் கோரி இன்று (22) கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் கொடூர அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதனால் பங்களாதேஷ் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர்.

தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கடந்த 16ஆம் திகதி முதல் நடந்து வரும் வன்முறை போராட்டங்களில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...