ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவுக்குமிடையே விசேட ஒன்றுகூடல்: யாப்பினை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கவனிப்பு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழுவினர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-புத்தளம் மாவட்டக் கிளை நிர்வாகிகளுக்கிடையிலான விஷேட ஒன்றுகூடலொன்று நேற்று முன்தினம் (02) ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் இலக்கு, பணிக்கூற்று மற்றும் யாப்பினை அடிப்படையாகக்கொண்டு புத்தளம் மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விதத்தில் ஜம்இய்யாவின் சமய, சமூகப்பணிகளை வீரியமாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதோடு அம்மாவட்டத்தில் மேலும் பிராந்தியக் கிளைகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிலா, உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்,ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஊடகக்குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அரபிக்கல்லூரிகளுக்கான குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...