டிஜிட்டல் மயமாகும் சாரதி அனுமதிபத்திரம்!

Date:

இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை இலத்திரனியல் (Digital) முறைமைக்கு மாற்றப்பட போவதாக அண்மைய காலங்களில் கலந்துரையாடப்பட்டு வந்தாலும், தற்போது அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சாரதி அனுமதிபத்திரம் அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய முறையின் கீழ் இனிவரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை. மாறாக இருந்த இடத்தில் இருந்தவாறே பத்திரத்தை புதுபித்தல், காணாமல் போன சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நேரம் மற்றும் பணத்தை மீதப்படுத்த முடியும். தங்களின் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதற்காகவே பிரத்தியேகமான செயலி (App) ஒன்றும் நடைமுறையில் பரீட்சார்த்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினரின் செயற்பாடுகளால் தாமதமடைந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் அடுத்த மாத முடிவில் நிறைவுக்கு வரும். மீதமுள்ள 2 இலட்ச அனுமதி பத்திரங்களும் அச்சிடப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...