2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம், நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணைய வழியாக மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அந்த ஆணைக்குழு கேட்டுள்ளது.
இதற்கிணங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரவேசித்து, விண்ணப்பங்களை உரிய முறையில் அனுப்பி வைக்க முடியும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.