இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி

Date:

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று(04) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் பூதவுடல் நேற்று(03) பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வௌிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 4 மணி வரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 30ஆம் திகதி காலமானார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...