நாளை அதிபர் – ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், பெற்றோர்கள் நிலைமையை புரிந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) அனைத்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை கண்டிப்பதாகவும், என்ன நடந்தாலும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...