நாளை அதிபர் – ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Date:

தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், பெற்றோர்கள் நிலைமையை புரிந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) அனைத்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை கண்டிப்பதாகவும், என்ன நடந்தாலும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...