‘மாணவர்களை கொலை செய்வதை நிறுத்து’: பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Date:

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன்முறையை நிறுத்துமாறும் கோரி இன்று (22) கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் கொடூர அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதனால் பங்களாதேஷ் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர்.

தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

கடந்த 16ஆம் திகதி முதல் நடந்து வரும் வன்முறை போராட்டங்களில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...