உச்ச கட்டத்தை தொடும் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்வு

Date:

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 10 மாதங்களுக்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

இப் போரில் அனேகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இப் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இதற்கான நிபந்தனை அறிக்கையையும் அமெரிக்கா தயாரித்தது.

ஆனாலும் நிபந்தனைகளுக்கு இரு தரப்பினரும் இணங்குவதாக தெரியவில்லை. இன்று வரையில் போர் முடிவுக்கு வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டேயிர் அல் – பாலா, கான் யூனிஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த நள்ளிரவு முதல் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 10 மாதமாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 93,144பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...