சம்பிக்கவின் ஆதரவு சஜித்துக்கு: உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க உள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொண்டமைக்கான உடன்படிக்கையும் இன்று புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவை சம்பிக்க ரணவக்க ஆதரிப்பார் என பல்வேறு கருத்துகள் கடந்த காலத்தில் வெளியாகியிருந்தன. என்றாலும், இன்றைய தினம் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என சம்பிக்க ரணவக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...