சவூதிஅரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பல பகுதிகளில் வெள்ளம்

Date:

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் கடந்த வாரம் நிலவிய மோசமான வானிலையை தொடர்ந்து, தற்போது சவூதி அரேபியாவும் சீரற்ற வானிலையால் பாதிப்படைந்து வருகிறது. இதன் காரணமாக ராஜ்ஜியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சவூதி அரேபியாவில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக முஸ்லிம்களின் புனித பூமிகளில் ஒன்றான மதீனா,முனவ்வரா பிரதேசத்தில் கடும் மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தின் விளைவாக மஸ்ஜிதுன் நபவினுடைய சூழவுள்ள பகுதிகள் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையை வீடியோக்கள் மூலம் காணப்படுகின்றது. மதீனாவில் பல கட்டடங்கள், வாகனங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இது மதீனாவில் ஏற்பட்ட வரலாற்றில் இடம்பெறாதளவுக்கு பாரிய சேதங்களை கொண்ட வெள்ள அனர்த்தமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் சவூதி அரேபியாவின் அஸீர் என்ற பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக  ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் மரணித்துள்ளார்கள்.

மற்றுமொரு பகுதியில் பாடசாலையொன்றின் அதிபரும் அவரின் மனைவியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சவூதி தேசிய வானிலை ஆய்வு மையம் மதீனா பகுதியில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய அதிக மழை என வானிலை மேலும் தீவிரமடையும் என்று கணித்துள்ளதால், அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் மோசமான வானிலை ராஜ்யம் முழுவதும் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://x.com/Arabbeau/status/1785066242140676469?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1785066242140676469%7Ctwgr%5E24420d9e1657492de1cc0075dc4fd55f853c2056%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.khaleejtamil.com%2F2024%2F04%2Fsaudi-arabia-slashed-by-heavy-rain-medina-under-red-alert%2F

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...