உச்ச கட்டத்தை தொடும் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்வு

Date:

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 10 மாதங்களுக்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

இப் போரில் அனேகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இப் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இதற்கான நிபந்தனை அறிக்கையையும் அமெரிக்கா தயாரித்தது.

ஆனாலும் நிபந்தனைகளுக்கு இரு தரப்பினரும் இணங்குவதாக தெரியவில்லை. இன்று வரையில் போர் முடிவுக்கு வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டேயிர் அல் – பாலா, கான் யூனிஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த நள்ளிரவு முதல் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 10 மாதமாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 93,144பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...